tamilnadu

img

பத்தனம்திட்டா, ஒற்றப்பாலம் காங்கிரஸார் கூட்டாக விலகி மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்

பந்தளம்/ ஒற்றப்பாலம், 
பத்தனம்திட்டயில் காங்கிரஸ் கட்சியினர் கூட்டாக விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவது தொடர்கிறது. இதுபோல் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலத்திலும் கூட்டாக விலகி சிபிஎம்-மில் 24 குடும்பங்கள் இணைந்தன.

பந்தளம் குரம்பால ஆதிரமலா புல்லூர் பகுதிகளில் 15 காங்கிரஸ் ஊழியர்களும், அவர்களது குடும்பத்தினரும் சிபிஎம்-மில் இணைந்தனர். காங்கிரஸின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசுக்கு அதரவு தெரிவித்தும் கட்சியில் இணைந்து செயல்பட முன்வந்த இவர்களை சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.பி.உதயபானு வரவேற்றார்.

பாலக்காடு
பாலக்காடு மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து மார்க்சிஸ்ட் கட்சிக்கு வருகை தொடர்கிறது. முண்டூர் கொட்டுக்குந்நு, சேரும்பால பகுதிகளிலிருந்து இதுவரையிலான காங்கிரஸ் உறவைத் துறந்து 24 குடும்பங்களைச் சேர்ந்த 68 பேர் சனியன்று சிபிஎம்-மில் இணைந்தனர். ஏற்கனவே, பல்வேறு இடங்களில் லீக், பாஜக, காங்கிரஸ் கட்சிகளிலிருந்து விலகி சிபிஎம்-மில் இணைந்தனர். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஹம்சா, அவர்களை வரவேற்றார்.

;